Wednesday, January 19, 2005

மைசூர் பாகு

பெயரைக் கேட்டவுடன் இது எங்கிருந்து வந்தது என்று தெரிந்து விடும்.ஆகவே பெரிதாக இதைப் பற்றி சொல்லிக் கொள்ளாமல் மைசூர் பாகுவை செய்து கொள்ளுவோம்.

தேவையான பொருட்கள்
1. ஒரு பேணி கடலைமா
2. இரண்டு பேணி சீனி
3. இரண்டு பேணி தண்ணீர்
4. 250 கிராம் அளவிலான நெய் அல்லது பட்டர்

செய்முறை
கடலை மாவை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். சீனியையும் தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் காய்ச்சிக் கொள்ளுங்கள். அதனுள் மாவைப் போட்டு சட்டியில் ஒட்டாமல் இருக்க அவ்வப் போது நெய் அல்லது பட்டரைச் சேர்த்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும். பதம் நன்றாக வந்தபின் தட்டையான பாத்திரத்தில் பரவி உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். என்ன மைசூர் பாகு சுவைக்கிறதா?

1 comment:

Indrany said...

சரி தோழரே